உ. தாமரைச்செல்வி

ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் .
நம் உடல் ஈசா ரூபம் என்பதால், நம் உடலில் அந்த லோகங்களுக்குரிய பகுதிகள்
- அதலலோகம் – உள்ளங்கால்
- விதலலோகம் – கணுக்கால்
- சுதலலோகம் – முழங்கால்
- நிதல லோகம் – முழங்காலுக்கு மேல்
- ஊரு லோகம் – வலது மேல் தொடை
- தராதலம் – இடது மேல் தொடை
- ராசாதலம் – குய்யம்
- பாதல லோகம் – இடை
- பூலோகம் – நாபி (தொப்புல்)
- சுவர்க்க லோகம் – இதயம்
- மகா லோகம் – தோல்
- ஜன லோகம் – முகம்
- தவ லோகம் – நெற்றி
- சத்ய லோகம் – சிரசு
சிவயோகத்தில் தாமே ஈசனாக மாறும் தவமுறையைக் கற்ற சித்தர்கள் உள்ளங்காலில் இருந்து தலை உச்சி வரை ( அதலம் லோகம் முதல் தவலோகம் வரை தவம் செய்து பின் சத்ய லோகம் புகுவர்) தவம் செய்து கர்ம வினைகள் அற்ற ஆன்மாவாய் தானே ஈசனாக மாறுவார்கள் . நீங்களும் இதைப் பின்பற்றித் தவ சக்தியால் சிவரூபம் ஆகலாம்.