
தேவையான பொருட்கள்:
- கேரட் – 1
- பப்பாளிப் பழம் – 1
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- பால் – 1 கப்
- நாட்டுச் சர்க்கரை – 50 கிராம்
- ஐஸ் கட்டி – 5 (தேவைக்கு)
செய்முறை:
- கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கிப் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
- பப்பாளிப் பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- பப்பாளிப் பழத்துண்டுகளுடன் அரைத்து வைத்திருக்கும் கேரட், இஞ்சிக் கலவை, நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
- பப்பாளிப் பழக் கலவையுடன் காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ்கட்டி கலந்து பருகலாம்.