எழுதியவர் – சசிகலா திருமால்

மழையோடு கூடிய
மாலை நேரமொன்றில்
யாருமற்ற தனிமையில்
சூடான தேநீருடன்
சுடச்சுட நின் நினைவுகளையும்
மிடறுகளாய் விழுங்கி
செரிக்கையில்…
சூடான தேநீர் தொண்டைக்குழிக்கும்
கண்களில் வழியும் கண்ணீர்
நெஞ்சுக்குழிக்கும்
இதமளிக்கிறதடா….
என் கவிதைக் காதலா….