
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி – 6 கப்
- முழு உளுந்து – 1 கப்
- வெந்தயம் – 1/2 கப்
- முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 3 கப்
- வாழை இலை – 2
- நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எடுத்து, அவற்றை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
- நன்கு ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். பிறகு முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும்.
- பிறகு உளுந்து, அரிசி இரண்டையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்து புளிக்க விடவும்.
- பிறகு இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை கொஞ்சம் தடிமனாக ஊற்றவும்.
- இட்லி தட்டை மூடிவைத்து ஆவியில் வேக வைக்கவும்.
குறிப்பு: மூட்டுவலியுடையவர்களுக்கு இந்த இட்லி பயன் தரும்.