தேவையான பொருட்கள்:

  1. இட்லி அரிசி – 6 கப்
  2. முழு உளுந்து – 1 கப்
  3. வெந்தயம் – 1/2 கப்
  4. முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 3 கப்
  5. வாழை இலை – 2
  6. நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எடுத்து, அவற்றை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. நன்கு ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். பிறகு முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும்.
  3. பிறகு உளுந்து, அரிசி இரண்டையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  4. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்து புளிக்க விடவும்.
  5. பிறகு இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை கொஞ்சம் தடிமனாக ஊற்றவும்.
  6. இட்லி தட்டை மூடிவைத்து ஆவியில் வேக வைக்கவும்.

குறிப்பு: மூட்டுவலியுடையவர்களுக்கு இந்த இட்லி பயன் தரும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal