எழுதியவர் – தூரா.துளசிதாசன்

புரட்சி வேள்வியில்
சிந்தனை பொறியை
தூக்கி எறிந்திடும்
தீக்குச்சி..!
அடிமை விலங்கை
உடைத்தெறிந்த
அஹிம்சை ஆயுதம் ..!
நரகத்தின் வாசலை
மூடிடும் திறவுகோல்..!
கல்லுக்கும் உயிரூட்டும்
மந்திரக்கோல்..!
காலச்சுவடுகள்
பொதிந்து கிடக்கும்
பொக்கிஷம்…!
அழிவில்லா காலக்கண்ணாடி..
அறிவுசுரக்கும் அட்சயபாத்திரம்..!
கருப்பு இதயங்களின்
கறுப்பு பக்கங்களை
புரட்டி பார்க்கும்
கருவூலப் பெட்டகம்…