எழுதியவர் -த. ரவீந்திரன், திருச்செங்கோடு..

தனிமை விரும்பியின்
தன்னிலை மறக்க செய்திடும்.!
தாகம் வந்தாலும் ஊற்றாக
நனைய வைத்து தாகம் தீர்க்கும்.!
சிறைபட்ட சிந்தனையை சில்லாகித்து
சிகரம் தொட வைக்கும்.!
கனவுகளை நனவாக்க காலம்
தந்த நம்பிக்கை பெட்டகம்.!
காற்றில் கலந்த கானமென
மனதோடு பேசிடும் மௌனராகம்.!
மலைச்சாரலென தென்றலாக
திங்கள் ஒளி வீசும் முத்துக்களை
கோர்த்து வைத்த முத்தமிழின்
மொத்தம் நிறைந்த தேவாமிர்தம்
அந்த புத்தகங்கள்..!