
எழுதியவர் – சுயம்பு
செருப்பணிந்தும்
முள் குத்தியது
அவள் வார்த்தை
சுட்டது வெயில்
ஓதுங்கினேன்
குத்தவில்லை
முள் மர நிழல்
“மழை பிடிக்கும்”
எழுதிய கவிஞன் வீட்டில்
பிடிக்க பாத்திரமின்றி
வழிந்தோடியது
“மழை நீர்”
ஈரமற்ற வறுமை
ஊதிக் கொண்டிருந்தாள்
பற்ற வில்லை
“ஈர விறகு”
காதர் வீட்டு கல்யாணம்
விருந்தாகின
முருகன் வீட்டு ஆடுகள்
சித்தாள் சேலையில் ஓட்டை
பார்வையால் அடைத்தார்
மேஸ்திரி
பகலில் சிரிக்க
ராத்திரி ரணமானாள்