எழுதியவர் – கார்த்திகேயன்.

தோசை சுட்டது,
புரோட்டா போட்டது……
களை பறித்தது,
நாத்து நட்டது……….
தறி நெய்தது,
தயிர் வடை சாப்பிட்டது……..
டீ ஆற்றியது,
டேபிள் துடைத்தது……
ஆட்டோ ஓட்டியது,
அடிக்கடி தனக்குதானே
சிரித்துக் கொண்டது……..
ஆகா, அத்தனைக்கும்
விழுந்தது பார்
முற்றுப்புள்ளி…………
அதுமட்டுமா உங்கள் கை
விரலில் பாருங்கள்
அங்கேயும் ஒரு புள்ளி……
அதுவே உங்கள்
வாழ்வில் துவங்கப்போகும்
விடியலின்
முதல் புள்ளி.
# கார்த்திகேயன்.