
தேவையான பொருட்கள்:
- புழுங்கல் அரிசி – 1 கப்
- வெல்லம் – 3/4 கப்
- நெய் – 1 மேசைக்கரண்டி
- துவரம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
- தேங்காய்த் துருவல் – 1/4 கப்
- ஏலக்காய்த்தூள் – சிறிது
- மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரி – 10
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
- இதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தயிர் சாதம் போல் தளரக் கலந்து, அத்துடன் துவரம் பருப்பையும் சேர்த்துக் குக்கரில் வேக விடவும்.
- ஆறியதும் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
- வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும்.
- பாகை எடுத்துத் தண்ணீரில் போட்டால் முத்து போல் நிற்க வேண்டும்.
- இந்தப் பதத்துக்கு வந்ததும் உதிர்த்த புட்டு, முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
- ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.