
வவுனியா – பம்பைமடுவில் பிறந்த சிசுவை தாயே மண்ணுக்குள் புதைத்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது.
இதன்போதே குறித்த தாய் தான் பெற்ற குழந்தையை தான் வசிக்கும் காணியில் குழிதோண்டி புதைத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் அவர் அந்தக் குழந்தையை தான் பிரசவிக்கவில்லை எனக்கூறியிருந்தார்.
இதனையடுத்து, அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் குறித்த தாயை கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த தாய் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து தனியாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.