
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமது கோரிக்கை முன்வைத்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.