மாணிக்கவாசுகி செந்தில்குமார்

–
தேவையான பொருட்கள்:
- ரவை – 1 கப்
- வெங்காயம் – 1
- கரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் – 1 1/2 கப்
- தக்காளி – 1
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
- கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – 5 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- மல்லித்தழை (நறுக்கியது) – 1/4 கப்
செய்முறை:
- உளுத்தம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
- தண்ணீரை ஒரு அடுப்பில் தனியாகக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சூடு செய்து தாளிக்க வேண்டியப் பொருட்களைச் சேர்க்கவும்.
- ஊற வைத்த பருப்புகளைத் தண்ணீரை நன்கு வடித்துச் சேர்க்கவும். கடைசியாக கருவேப்பில்லை சேர்க்கவும்.
- நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், பொடியாக நறுக்கிய காய்கறிகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- அதற்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும்.
- மஞ்சள் தூள், மல்லித்தழை, ரவை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
- மேலும் ஒரு மேஜைக்கரண்டி நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறவும்.
- நன்கு தண்ணீர் வற்றிக் கூழ் போல ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
- மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். இடையில் ஒருமுறை நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஒரு முறைக் கிளறவும்.
- கிச்சடி வெந்தவுடன் ஒட்டாமல் அல்வா அல்லது கேசரி போல வரவேண்டும். இல்லை என்றால் மேலும் எண்ணெய் சேர்த்துக் கிளறவும்.