யாழ்.சிறுப்பிட்டி ஆரம்ப பிரிவு பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், பாடசாலை அதிபருடன் தொடர்பில் இருந்த சுமார் 100 கணக்கானோர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த அதிபர் கடந்த 14 ஆம் திகதி யாழ்.கல்வித்திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதில் 50பேர் பங்குபற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைவிட குறித்த அதிபர் தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புகளை நடாத்தியுள்ளதோடு பெற்றோர் கலந்துரையாடலையும் நடாத்தியுள்ளார். அது மட்டுமன்றி உரும்பிராயில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்த அல்லது அவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு குறித்த அதிபரின் வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் அவருடன் திணைக்களத்தில் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள் கல்வி அதிகாரிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த அதிபரின் பாடசாலையில் முதல்வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில், கடந்த 9ஆம் தேதி குறித்த பாடசாலை அதிபர் முதலாவது கொரோனா தடுப்பூசியும் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal