
24 வயதுடைய நீர்கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் 50 வயதுடைய பணக்காரரான ஹோட்டல் உரிமையாளரைக் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சோதனையின் போது கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் தானும் ஹோட்டல் உரிமையாளரும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தல் விடுத்தமையினால் மன வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.