பிணை முறி மோசடி தொடர்பாகவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி மோசடி குறித்து விசாரணை செய்ய இரு நீதிமன்ற தீர்ப்பாயங்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டன.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோர் அடங்கிய ஒரு நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பாய நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா, பலல்லே மற்றும் ஆதித்ய படபந்திகே ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கில்முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal