
தேவையான பொருட்கள்:
- மட்டன் (எலும்பில்லாதது) – 1/2 கிலோ
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் – 3 எண்ணம்
- மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
- பட்டை – 1 துண்டு
- கராம்பு – 3 எண்ணம்
- ஏலக்காய்த் தூள் – சிறிது
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகுத் தூள் -3 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
- குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கறியைச் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து விசில் வரை வைக்கவும்.
- ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
- தாளிசத்தில் மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் வேகவைத்த கறியை மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.