
வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் என்பவரின் மரணத்திற்கு நீதி கோரியும் பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும்பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.