
இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட பிரேரணை வரைவு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
“இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும்.
இவ்வாறானதொரு பிரேரணைக்குப் பிரிட்டன் தலைமை தாங்குவது, ஒரு பொதுநலவாய உறுப்பினரான இலங்கை மீது பிரிட்டனின் நட்புறவற்ற செயலாகும்.
இது பிரிட்டன், இலங்கைக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும்.
இலங்கையைத் திட்டமிட்ட வகையில் பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் பழிவாங்குகின்றன – எனக்கூறியுள்ளார்.