தலைமன்னாரில் இடம்பெற்ற விபத்திற்கான காரணம் வெளியானது. விபத்து நடைபெற்ற குறித்த நேரத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரதக் கடவைக்கான தடை, குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரியவருகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களின் மத்தியின் பேரதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. ஏற்பட்ட விபத்தில் குறித்த தனியார் பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த மாணவர்கள், பயணிகள் உட்பட 25 பேர் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

பின் இருக்கையில் இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal