
இந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் எண்களை மாற்றாமல் விரும்பிய வலையமைப்பை மாற்றும் வசதி, இலங்கையில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ,இச்சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, சேவை வழங்குனரை மாற்றினாலும், தொலைபேசி இலக்கத்தை நிலையானதாகப் பேண முடியும் என கூறப்படுகிறது.
இந்த நடைமுறைக்கு இலங்கையிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இச் சேவை செயற்படுத்தப்படும் எனத்தெரியவருகிறது.