
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 1 கப்
- ரவை – 1/4 கப்
- சர்க்கரை – 1/4 கப்
- வறுகடலை – 1/4 கப்
- தேங்காய் – 1/2 மூடி
- ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி
- நெய் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- வறுகடலையைப் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காயைத் துருவி வைக்கவும்.
- ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கி வைக்கவும்.
- மைதா மாவிவுடன் ரவை, உப்பு சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
- இந்த மாவை ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
- வறுகடலை மாவுடன், சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாகச் செய்து கொள்ளவும்.
- ஈரத்துணியில் சுற்றிய மாவை எடுத்து, சிறுசிறு சப்பாத்திகளாக இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி சோமாஸாக செய்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அந்த எண்ணெயில் சோமாஸ்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.