தேவையான பொருட்கள்:

  1. எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
  2. வெங்காயம் – 1
  3. நறுக்கிய தக்காளி – 1
  4. நறுக்கிய குடைமிளகாய் – 1/2 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் – 3
  7. தக்காளி சாஸ் – 1 கரண்டி
  8. சோயா சாஸ் – 2 கரண்டி
  9. வினிகர் – 1 கரண்டி
  10. கார்ன் பிளவர் – 2 கரண்டி
  11. மிளகாய்த் தூள் – 2 கரண்டி
  12. கரம் மசாலா – 1 கரண்டி
  13. எண்ணெய் – தேவையான அளவு
  14. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. அந்தச் சிக்கனுடன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கி 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  3. பின்னர் அதனுடன் 2 கரண்டி கார்ன் பிளவர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
  5. மற்றொரு கடாயில் எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  6. அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  7. அடுத்து, அதில் மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறவும்.
  8. பின்னர், அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  9. அதன் பிறகு, சிறிது நீரில் சோள மாவைச் சேர்த்துக் கலந்து, கிரேவியுடன் கலந்து மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: பாணி, சப்பாத்தி, பரோட்டா, பூரி ஆகியவற்றுக்கு இது அருமையாக இருக்கும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal