
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
- வெங்காயம் – 1
- நறுக்கிய தக்காளி – 1
- நறுக்கிய குடைமிளகாய் – 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 3
- தக்காளி சாஸ் – 1 கரண்டி
- சோயா சாஸ் – 2 கரண்டி
- வினிகர் – 1 கரண்டி
- கார்ன் பிளவர் – 2 கரண்டி
- மிளகாய்த் தூள் – 2 கரண்டி
- கரம் மசாலா – 1 கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
- அந்தச் சிக்கனுடன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கி 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- பின்னர் அதனுடன் 2 கரண்டி கார்ன் பிளவர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
- ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
- மற்றொரு கடாயில் எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
- அடுத்து, அதில் மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறவும்.
- பின்னர், அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- அதன் பிறகு, சிறிது நீரில் சோள மாவைச் சேர்த்துக் கலந்து, கிரேவியுடன் கலந்து மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: பாணி, சப்பாத்தி, பரோட்டா, பூரி ஆகியவற்றுக்கு இது அருமையாக இருக்கும்.