
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி -1 கப்
- புழுங்கலரிசி -1 கப்
- உளுந்தம் பருப்பு – 1 மேஜைக் கரண்டி
- தேங்காய் – பாதி
- வெந்தயம் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து இரவில் தோசை மாவு போல் ஆட்டி உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
- காலையில் தேங்காய்ப்பூ கலந்து குழிப்பனியாரச் சட்டியில் ஊற்றி எடுக்கவும்.
குறிப்புகள்:
- மாவில் வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வெட்டிப் போட்டுக் காரப்பனியாரமாகவும் சுடலாம்.
- இனிப்புப் பனியாரமாக சுட விரும்புபவர்கள் கருப்பட்டி கலந்தும் சுடலாம்…! சாப்பிடலாம்…!!