வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையே உள்ள அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர்.

அந்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியிருந்தார்.

இந்த நிலையில் அச் சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர்மீது நபர் ஒருவர் நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கிராம சேவகரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal