எனோனிமஸ் எனப்படும் உலகில் மிகப் பயங்கரமான கணனி ஹெக்கர்கள்  அணியினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 14 நாட்களுக்குள் ஜனாதிபதி கோட்டபாய பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதிகாரங்களை புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், 

அவ்வாறு செய்யாவிட்டால்  ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான தலைவர்கள் மறைத்து வைத்துள்ள சொத்துக்களை வெளியிட்ட அணியினர் எனக் கருதப்படுகிறது.

இந்த அணியினர் பென்டோர ஆவணங்கள், பனாமா ஆவணங்கள், விக்கிலீக்ஸ் என கடந்த காலங்களில் உலகில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் தகவல்களை  வெளியிட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal