எழுதியவர் – பா. காருண்யா, மதுரை

அன்பில் 12 வகைகள் இருக்கின்றன. அவை;
- இரக்கம் – எளியவர் மேல் காட்டுகின்ற அன்பு.
- கருணை – அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகின்ற அன்பு.
- ஜீவகாருண்யம் – எல்லா உயிர்களிடத்திலும் செலுத்தும் அன்பு.
- பந்தம் – உறவினர்களிடத்தில் செலுத்தும் அன்பு.
- பட்சம் – முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.
- விசுவாசம் – வேலை செய்பவர் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.
- பாசம் – தாய், குழந்தைகளுக்கிடையிலான அன்பு.
- நேசம் – தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.
- காதல் – கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்பு.
- பக்தி – கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.
- அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.
- அபிமானம் – ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகின்ற அன்பு.
அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம் ஏற்படும். நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மையைத் தரும்.