ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அத்துடன் மக்கள் கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் சுகாதார விதிகளையும் முகக்கவசம் அணிவதையும் புறக்கணிப்பதால் இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருகிறதாகவும் அவர் கூறினார்.

அதேசமயம் கொரோனா தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பேரழிவை நோக்கி செல்லும் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதை விட தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என சுட்டிக்காட்டிய அவர், தொற்றுநோய் கடந்துவிட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளதாகவும் விசனம் வெளியிட்டார்.

அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிலைநிறுத்துவதில் அரசாங்கமும் பொதுமக்களும் ஆர்வத்தை இழந்துள்ளனர்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் ஒரே கடமையாக மாறியுள்ளதாகவும் உபுல் ரோஹன கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal