மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை என்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிக்கின்றனர்.

அதன்படி புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி, புன்னக்குடா உட்பட பல கரையோர பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள், இன்றைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

பாரியளவில் கொந்தளிக்கும்  கடல்; முற்றாக ஸ்தம்பிதமடைந்த மீன்பிடி நடவடிக்கை

மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடற்றொழிலாளர்கள் தமது படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக மீன் விற்பனை நிலையங்கள் மீன் வாடிகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal