நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற குடும்பஸ்தருக்கு தேவாலயத்திற்குள் ஏற்பட்ட விபரீதம்!

வடமராட்சியில் தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக சென்று அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த வினோத் என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.

அனர்த்தத்தில் மனைவிக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை. அவர்களது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.  அனர்த்தினால் அப்பிரதேச மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal