பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் அப் பெண் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், “பாடசாலை பிள்ளைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு பெற்றோரை முரண்பட வைத்து தாக்குதலில் முடிந்துள்ளது.

ஒரே குடும்பத்தினை சேர்ந்த உறவினர்களான 5 பேர் எனது வீடு புகுந்து வந்து, என்னை அடித்து கத்தியாலும் வெட்டியுள்ளார்கள்.

அதோடு எனது வீட்டுக்கு தீ வைத்து வீட்டின் ஒரு பகுதி ஏரிந்துள்ளது. கதவினை உடைத்துள்ளார்கள். இந்நிலையில் நான் கல்லால் அவர்களை அடித்தேன். என்னை அடிக்க வந்த ஒருவரின் மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அதன் ஊடாக நான் மருத்துவமனை சென்றதாகவும் அவர் கூறினார்.

வீட்டில் எனது கணவன் நான்கு பிள்ளைகளுடன் இருந்த வேளை, இரவு நேரம் மண்வெட்டிபிடியால் கணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டினையும் சேதப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அடிவாங்கிய தனது கணவனையே கைது செய்ய முயற்சித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துன் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கின்றோம் எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பொலிசார்தான் பொறுப்பு என்றும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal