தமிழகத்தில் கொரோனா தளவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், நேற்று ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 10ம் திகதி முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது, தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 21ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக, நேற்று முன்தினம் முதலே மதுக்கடைகளின் வாயில்கள் முன்பே தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி நடந்தன.
வட்டத்திற்கு நின்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், 34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் ஆர்வத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில் சில கடைகளில் மதியமே அனைத்து மதுபானங்களும் விற்று தீர்ந்து விட்டன. அதன்படி நேற்று ஒரே நாளில் 27 மாவட்டங்களில் சுமார் ரூ.165 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.