Gallery

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பட்டமானது இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்தது கொண்டிருந்தனர்.

இதன் போது “ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?” – “புலனாய்வாளர்களைக் கொண்டு எம் மக்களை அச்சுறுத்தாதே” – “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்” –  “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அரசைப் பாரப்படுத்து” – “அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்” –  “சர்வதேசமே இலங்கை அரசுக்குத் துணை போகாதே” – “இலங்கை அரசே எமது உணர்வுகளுக்கு மதிப்பளி” – “ஐநா வே ஓஎம்பியை எம் மீது திணிக்க இலங்கை அரசுக்குத் துணை போகதே” போன்ற வாசகங்களை எந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal