தேவையான பொருட்கள்:

  1. பாசுமதி அரிசி – 2 கப்
  2. கடலைப் பருப்பு – 1/4 கப்
  3. பட்டை – 2 துண்டு
  4. கிராம்பு – 2 துண்டு
  5. ஏலம் – 2 எண்ணம்
  6. மஞ்சள் தூள் ‍- 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
  8. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
  9. தக்காளி – 2 எண்ணம்
  10. மல்லித் தழை – 3 மேசைக்கரண்டி
  11. புதினா தழை – சிறிது
  12. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  13. எலுமிச்சம் பழம் – 1/2 பழம்
  14. எண்ணெய் – 4 தேக்கரண்டி
  15. வெண்ணெய் – 3 தேக்கரண்டி 16. தயிர் – 3 தேக்கரண்டி
  16. உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  1. அரிசி மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
  3. பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பச்சை வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டிச் சேர்த்து மஞ்சள் தூள், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா, மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.
  5. ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர், கால் கோப்பை பருப்பிற்கு அரை கப் தண்ணீர் என்று சேர்த்து, அத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விடவும்.
  6. சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறலாம்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal