கனடாவில் விவாகரத்து பெற்று பிரிந்த கணவன் – மனைவி உறவு முறிவுக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு லொட்டரியில் பல கோடிகள் பரிசாக விழுந்துள்ளது.

ரொறன்ரோவை சேர்ந்தவர் எலிசபெத் லும்போ. இவரும் அர்லீன் என்பவரும் தம்பதிகளாக இருந்த நிலையில் பிரிந்துவிட்டனர். இருந்த போதும் தற்போது வரையில் ஒருவரையொருவர் சிறந்த நண்பர்களாகக் கருதுபவர்களாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் எலிசபெத் – அர்லீனுக்கு லொட்டோ மேக்ஸ் ஜாக்பாட்டில் $44,023,273.40 பரிசு விழுந்துள்ளது. இந்த அதிர்ஷ்ட லொட்டரி டிக்கெட்டை எலிசபெத் தான் வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து அந்த பரிசு பணத்தை தனது முன்னாள் கணவர் அர்லீனுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். எலிசபெத் கூறுகையில், என் பிள்ளைகளை நன்றாகவும் வசதியாகவும் வைத்து கொள்ள இந்த பரிசு உதவும், நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன்.

எனக்கு அதிகளவில் பயணம் செய்ய வேண்டும் என்பது விருப்பம் உள்ளது, பயணிப்பது பாதுகாப்பானதாக மாறும் போது அதை செய்வேன்.

எங்கள் குழந்தைகளால் எங்களுக்கு பரிசு விழுந்ததை முதலில் நம்ப முடியவில்லை. அதனால் எனது டிக்கெட்டின் புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பினேன் என கூறியுள்ளார். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal