கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கிய நிலையில் பின்னர் உயிரிழந்தார்.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 40களில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பனிகள் படர்ந்திருந்த பள்ளத்தாக்கில் மயங்கியபடி கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர உதவி குழுவினர் வந்து அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

மோசமான சூழ்நிலை காரணமாக அந்த நேரத்தில் மூடப்பட்டிருந்த பகுதியில் அந்த நபர் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இதனிடையில் உயிரிழந்த நபரின் இறப்புக்கான சரியான காரணத்தை அறியும் முயற்சியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal