மர்ம தேசமென அறியப்படும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறியிருந்தார்.

இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவாகியிருந்தது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் மர்மதேசம்!! மீண்டும் பலம்மிக்க ஏவுகணை பரிசோதனை

இந்நிலையில்,தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா இன்றுறு சோதனை செய்துள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியன உறுதிசெய்துள்ளன.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து ஜப்பான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பரப்பில் விழுந்ததாக ஜப்பானின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal