சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் இஸ்ரேலிய அணு உலைக்கு அருகே தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் எதிர்காலத்தில் அதன் வளங்களுக்கு அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என்று ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்தார்.

இஸ்ரேல் தொடர்ந்து தனது வளங்களைத் தாக்கினால் ஈரான் எவ்வாறு பதிலளிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி முகமது பாகேரி, ஈரானிய பதிலின் தன்மை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ‘சியோனிச ஆட்சி எளிதில் ஓய்வெடுக்காது’ என கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரிய மண்ணில் இலக்குகளைத் தாக்கி, எதிர்விளைவுகள் இல்லாமல் கடலில் தாக்குதல்களை நடத்த முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது.

நிச்சயமாக சமீபத்திய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் நலன்களுக்கு ஆபத்து விளைவிக்கும்.

சமீபத்திய தாக்குதல்களுக்குப் பின்னால் யார் என்பது குறித்து தனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் எதிர்ப்பு முன்னணி சியோனிஸ்டுகளுக்கு ஒரு அடிப்படை பதிலைக் கொடுக்கும்’ என கூறினார்.

இதனிடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரானின் இராணுவம் ஏழு புதிய இராணுவ சாதனைகளை அறிமுகப்படுத்தியது. இதில் பல வகையான நில அடிப்படையிலான மற்றும் ஆளில்லா விமானம், ராடர்கள் அடங்குகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal