மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு எனக்கு பைத்தியம் பிடித்து விடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவி வருவதாகவும் அதில் உண்மை இருக்கின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றால் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என சிலர் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் டொலர் கையிருப்பானது ஜனவரி மாதத்துடன் முடிந்து விடும் நிலைமைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதாரம் மிகவும் சிரமமான இடத்தில் இருப்பதால், அடுத்த ஆண்டு மிகவும் கஷ்டமான ஆண்டாக இருக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal