கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசானது அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிருத்தி விட்டதாக அறிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த ஆதாரங்களை மேற்கோள்ளிட்டுள்ள குறித்த மாநிலம் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஒன்ராறியோ அதிகாரிகள், இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்டமக்களில் 60 ஆயிரம் பேரில் ஒருவர் இரத்தம் உறைவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தமாக 8 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பல ஐரோப்பிய நாடுகளில் 95 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.