அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது.

சீனாவின இலட்சிய திட்டமான ‘பெல்ட் மற்றும் வீதி’ திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண அரசாங்கத்துடன் கடந்த 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999ஆம் ஆண்டு சிரியாவும் 2004ஆம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவில் உள்நாட்டு அரசியலில் இரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம் கொண்டவை என சீனா கடுமையாக விமர்சித்தது.

இதுகுறித்து அவுஸ்ரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா-அவுஸ்ரேலியா உறவுகளை மேம்படுத்துவதில் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எந்த நேர்மையும் இல்லை என்பதை இந்த முடிவு மேலும் காட்டுகிறது.

இது இருதரப்பு உறவுகளுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும், அது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal