அவசரமாக வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்று மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட, யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரியே இவ்வாறு கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் மூடப்படுகின்றது.

நாளைய தினம்(05/04/2021) முதல், மறு அறிவித்தல்வரை குறித்த பாடசாலையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையையடுத்தே இவ்வாறு மூடப்படுவதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal