ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க குபேரன் கருணாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹட்டன் – விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதே பக்கத்தில் நடந்து சென்ற குறித்த இளம் குடும்பஸ்த்தர் மீது மோதியுள்ளது.

குறித்த நபர் வீதியில் சென்ற பெண் மீது வீழ்ந்து, நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு மீண்டும் வீதியின் பக்கம் வீழ்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி பேருந்தினை நடு வீதியில் நிறுத்திவிட்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், ஆண் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் பேருந்தினையும் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal