அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த மாதம் முதல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அதிக மழைவீழ்ச்சி, காற்று காரணமாக, கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட, நாட்டின் பொருளாதார வாழ்வாதாரங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லும் போதும், மீனவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இடி மின்னல் தாக்கம் குறித்தும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal