லண்டனில் புதிய அலுவலகம் அமைக்க ரூ.7,500 கோடி மதிப்பிலான பிரமாண்ட கட்டிடத்தை கூகுள் வாங்கியது. கூகுள் தற்போது அதே கட்டிடத்தில் வாடகைக்கு செயல்படுகிறது.
இங்கிலாந்தில் 6,400 ஊழியர்களைக் கொண்டுள்ள கூகுள், விரைவில் அந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, ஊழியர்கள் எளிதாக பணிபுரியும் வகையில், செயின்ட் கில்ஸ் கட்டடத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அதன் வளாகத்தில் காற்றோட்டத்துடன் செயல்படும் வகையில் புதிய வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
