ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரா் டோனி தொடா்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தொடா்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி உத்தரவை சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி மீதும் குற்றம் சாட்டியிருந்தாா்.

இதுகுறித்து தனியாா் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் விளக்கம் அளித்தாா். இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி, ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தனியாா் தொலைக்காட்சி நிா்வாகம், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் ஆகியோருக்கு எதிராக, டோனி கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

அவரின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி காவல் அதிகாரியான சம்பத் குமாா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, டோனி தொடா்ந்த வழக்கில் தற்போது சாட்சி விசாரணை தொடங்கியுள்ளது.

இப்போது இந்த வழக்கை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் தாமதமாகும். எனவே, காவல் அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal