யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து 31 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த மீன்பிடிப் படகை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது படகில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 103 கிலோ 750 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன் படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கேரள கஞ்சாப் போதிகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கைதான சந்தேக நபர்கள் மூவரும் 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதோடு பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

