யாழில் நேற்றிரவு வாள் வெட்டு குழு அரங்கேற்றிய கொடூரம்!

யாழில் நேற்றிரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (15-12-2021) 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் நவாலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டியதுடன், வீட்டின் அனைத்து ஜன்னல், கதவுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதேவேளை, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றோல் ஊற்றி எரித்து சேதப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal