முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சகோதரியின் கணவர், விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி காலை சென்ற நிதர்சனா மாலை வரை வீடு திரும்பாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பொலிசாரின் தீவிர தேடுதலில், மாணவி இறுதியாக சென்ற சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து நிதர்சனாவின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
பிரேத பிரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை 06 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் கடைசிப் பிள்ளையான நிதர்சனா, திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்று வந்துள்ளார். சிறுமியின் மரணம் முல்லைத்தீவில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.