‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டவர் நடிகை ரித்திகா என்பது தெரிந்ததே. அவர் மூன்று வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பின் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூன்று வாரங்களுக்கும் அவருக்கு பாலாதான் கோமாளியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரித்திகாவுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வழக்கமான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal