
தேவையான பொருட்கள்:
- தயிர் – 500 மி.லி
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- பச்சை மிளகாய் – 2
- மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- மல்லித்தழை, தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும்.
- கடைந்த மோரில், அரைத்த விழுதைச் சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
- பிறகு, வடிகட்டி எடுத்துப் பரிமாறவும்.